பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும பாரிய மோசடி, ஊழல் மற்றும் அரச வளங்கள், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பிரச்சாரங்களை மேற்கொண்டமைக்காக அரச ஊடகம் ஒன்றுக்கு கொடுப்பனவு வழங்கப்படாமை தொடர்பிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
(riz)