(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனக்கான காலம் தற்போது வந்துள்ளதாகவும் யார் எந்தவித தடைகளை ஏற்படுத்தினாலும் தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கட்டுவன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதன் மூலமாக சஜித் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாகவுள்ளது என அரசியல் வட்டரத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.