(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் வாரம் ஜனாதிபதி வேட்பாளர் பதவியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ விலகத் தயாராகுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ராஜித சேனாரட்ன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், கோத்தபாயவிடம் இரண்டு தேசிய அடையாள அட்டைகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமையை மோசடி செய்து பெற்றுக் கொண்ட நபர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாதென தடை உத்தரவு ஒன்று பெறப்படும் என அவர் கூறியுள்ளார்.