ஜப்பானிடமிருந்தும் 38 பில்லியன் யென் அபிவிருத்திக் கடன் உதவி

சிறுநீரக நோயாளிகளுக்கான நீர் சுத்திகரிப்பு கருத்திட்டங்கள் மற்றும் முழு நாட்டையும் இணைக்கும் வகையிலான மின் பரிமாற்ற வழிகளை இஸ்தாபித்தல் என்பவற்றுக்காக இலங்கைக்கு 38 பில்லியன் அபிவிருத்திக் கடன் உதவியை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது.

ஜப்பான் இசெஷிமாவில் நடைபெற்ற ஜீ 7 உச்சி மாநாட்டைத் தொடர்ந்து 2016 இன்று 28 ஆம் திகதி ஜப்பான் பிரதமர் மேன்மைதங்கிய சிங்சோ அபேவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே ஜப்பான் நகோயாவில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றது இதன் போதே ஜப்பான் இந்த உதவிகளை வழங்க முன்வந்தது.