நல்லெண்ண அடிப்படையில் இரண்டு ஜப்பானிய கடற்படைக் கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன.
ஜேஎஸ் மகிநமி மற்றும் ஜேஎஸ் சுசுநமி ஆகிய கப்பல்களே கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன.
நேற்று வந்த இந்த கப்பல்களை சில நாட்களில் இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையும் ஜப்பானும் கடல்எல்லை தொடர்பில் இணக்கத்துடன் செயற்படும் நோக்கிலேயே இந்த கப்பல் விஜயம் இடம்பெறுகிறது.
ஏற்கனவே 2011இல் ஜப்பானின் 8 கப்பல்கள் இலங்கைக்கு வந்தன. 2012இல் 12 கப்பல்கள் வந்தன.-2013இல் 11 கப்பல்களும் 2014 இல் 8 கப்பல்களும் இலங்கைக்கு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.