ஜம்மு காஷ்மீரில் இன்று(19) அதிகாலையில் 4.7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் காரணமாக ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள வீடுகள் அதிர்ந்துள்ளன. எனினும், நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்போ பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீரில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. கடந்த செப்டம்பர் 24-ம் திகதி இதேபோல் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்படத்தக்கது.