தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர நிதி மோசடி விசாரணை பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜயந்த சமரவீர நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்.
தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இன்று காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் குறித்து வாக்குமூலம் பெற்று கொடுக்கவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.