ஜா-எல, தொழிற்சாலை ஒன்றில் தீ.. விசாரணைகள் முன்னெடுப்பு

ஜா-எல, ராஜ மாவத்தையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பரவிய தீ விபத்து குறித்து ஜா-எல பொலிஸாரினால் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நேற்று(19) இரவு குறித்த தொழிற்சாலையில் தீப்பரவியதுடன் தீயணைப்பு படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் முயற்சியில் தீ அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீ விபத்தில் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் குறித்த விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

 

#riishma