ஜின் – நில்வள கங்கையினை அண்மித்த மக்கள் அவதானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதனால் பத்தேகம மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், நில்வள கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கெடுப்புக்கான அபாயம் உள்ளதாகவும் குறித்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.