உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான எல்லை மீள் நிர்ணய பணிகள் நிறைவடையவுள்ளன. இது குறித்தான குழுவின் அறிக்கை ஏப்ரல் மாதம் கையளிக்கப்பட உள்ளது.
இதன்படி ஜூன் மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடுகையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு அமைச்சின் மீது குற்றம் சுமத்தப்படுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் பைஸர் முஸ்தபா ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும், ஜூன் மாதம் நடத்தப்படும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் 70 சதவீதம் தொகுதி முறைமையும், 30 சதவீதம் விகிதாசார முறைமையையும் கொண்ட கலப்பு தேர்தல் முறைமையாக அறிமுகப்படுத்தப்படும் என்றார்.