ஜூனில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­ல்

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்­கான எல்லை மீள் நிர்­ணய பணிகள் நிறை­வ­டை­ய­வுள்­ளன. இது குறித்­தான குழுவின் அறிக்கை ஏப்ரல் மாதம் கைய­ளிக்­கப்­பட உள்­ளது.

இதன்­படி ஜூன் மாதம் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்­பா­டு­களும் பூர்த்­தி­யாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா மேலும் தெரி­வித்தார்.

தொடர்ந்து அவர் ஊட­கங்­க­ளுக்கு விடுத்துள்ள அறிக்­கையில் குறிப்பிடுகையில், உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல் பிற்போடப்பட்டமைக்கு அமைச்சின் மீது குற்றம் சுமத்தப்படுவதனை ஒருபோதும் ஏற்­றுக்­கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் பைஸர் முஸ்­தபா ஊட­கங்­க­ளுக்கு விடுத்துள்ள அறிக்­கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும், ஜூன் மாதம் நடத்­தப்­படும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் 70 சதவீதம் தொகுதி முறைமையும், 30 சதவீதம் விகிதாசார முறைமையையும் கொண்ட கலப்பு தேர்தல் முறைமையாக அறிமுகப்படுத்தப்படும் என்றார்.