(FASTNEWS | COLOMBO)- எதிர்வரும் ஜூலை 01ம் திகதியில் இருந்து வாகனங்கள் சத்தமாக ஒலி எழுப்பும் ஒலிவாங்கிகளை (ஹோன்களை) பயன்படுத்துவது தடை செய்யப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குறித்த தடையின்கீழ் வாகனங்களில், தேவையற்ற மின்குமிழ் அலங்காரமும் தடை செய்யப்படவுள்ளது.
எனினும் அவசர சேவை வாகனங்கள், பொலிஸாரின் வாகனங்கள், தீயணைப்பு படை வாகனங்களுக்கு மாத்திரம் குறித்த தடையில் இருந்து விலக்களிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.