அர்ஜுன் அலோசியஸின் தந்தை ஜெஃப்ரி அலோசியஸை எதிர்வரும் 05 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் பிணை மற்றும் முறி விநியோக மோசடி தொடர்பிலான விசாரணை நேற்று(21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஜெஃப்ரி அலோசியஸை அடுத்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.