ஜெனீவாவில் இலங்கை தொடர்பிலான முதலாவது ஆலோசனைக் கூட்டம் இன்று(05)…

(FASTNEWS | COLOMBO) – இலங்கை குறித்து ஜெனீவாவில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பான முதலாவது ஆலோசனை கூட்டம் இன்று(05) நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கை குறித்து முன்வைக்கப்படவுள்ள பிரேரணை குறித்தே இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் இதற்கு முன்பு இலங்கை தொடர்பில் கூறப்பட்ட விடயங்களும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.