(FASTNEWS-COLOMBO) பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு இலங்கைக்கு வாய்ப்பு வழங்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வேண்டுகோள் விடுப்பதற்காக மூவரடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்றை ஜெனீவாவுக்கு அனுப்பவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று(06) காலை இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சரத் அமுனுகம மகிந்த சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோரை ஜெனீவாவிற்கு அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.