ஜேர்மனி அதிபர் கலாநிதி அஞ்சலா மெர்கலுடன் ஜனாதிபதி சந்திப்பு

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மனி சென்றிருக்கும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (18) ஜேர்மனி அதிபர் கலாநிதி அஞ்சலா மெர்கல் அவர்களை சந்தித்தார்.

ஜேர்மனி அதிபருடைய அலுவலகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களுக்கு அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய பெருவரவேற்பு வழங்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையினைத் தொடர்ந்து இரண்டு நாடுகளினதும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது.
இந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் நிறைவில் ஒரு கூட்டறிக்கையொன்றும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.