ஜேர்மனி இராணுவ முகாமிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | ஜேர்மனி) –  ஜேர்மனி-ப்ருன்க்பர்ட் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாத்திரைக்காக சீனாவின் வுஹான் நகருக்கு சென்றவர்களே இவ்வாறு இரண்டு வாரங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களில் எந்தவொரு நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உறுதியானதைத் தொடர்ந்து இன்று அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.