ஜேவிபி புதிய முன்னணியின் கீழ் ஜனாதிபதித் தேர்தலுக்கு..

(FASTNEWS | COLOMBO) – மக்கள் விடுதலை முன்னணி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் புதிய முன்னணியின் கீழ் போட்டியிட உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி)  பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

குறித்த புதிய முன்னணிக்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் மாதத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், இதில் மக்களிடையே உள்ள கொள்கைகளை மாற்றி நாட்டில் பரந்த அமைப்பாக செயப்பட உள்ளதாகவும் அவர் மேலு தெரிவித்திருந்தார்.

இது ஜனாதிபதி தேர்தலை அல்லது பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்ட முன்னணி இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.