மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று(01) மாலை 3 மணிக்கு, நுகேகொட, ஆனந்த சமரகோன் திறந்த அரங்கில், மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஜனநாயகத்துக்கான உண்மையான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில், இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.