மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தேசிய அரசியலில் தொழிற்சங்க துறையில் முக்கிய பொறுப்பு ஒன்றை ஏற்றுக் கொள்ளும் நோக்கில் லால்காந்த பதவி விலகுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையே லால்காந்த பதவி விலக காரணம் என கூறப்படுகிறது.
ஜேவிபி தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக சுனில் ஹந்துநெத்தி மற்றும் கணக்காய்வாளர் சரத்சந்திர மாயாதுன்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
(riz)