முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர உத்தரவிட்டுள்ளார்.
சதொசவிற்கு சொந்தமான 5 மில்லியனுக்கும் அதிகமான நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கிற்குரிய சில ஆவணங்களில் சிக்கல் நிலவுவதால் அவற்றை மேலும் பரிசோதனைக்கு உட்படுத்தி குறுக்கு விசாரணை செய்யப்பட வேண்டும் என பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.