சத்தோச பணியாளர்கள் சிலரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூன்று பேரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டி முன் இந்த வழக்கு விசாரணை எடுத்து கொண்ட போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 வழக்குகளில் 1 வழக்கு தொடர்பாக ஒருவருக்கு ரூபாய் 50 ஆயிரம் ரொக்கப்பிணை மற்றும் ரூபாய் 50 லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.