முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
அவருடைய பதவிக்காலத்தில், 240 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் விசாரிப்பதற்கே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.