பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், உயர்நீதிமன்றத்தில் நேற்று அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த இந்த மனுவானது நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் தம்மை கைது செய்தமையானது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கக் கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்னும், முழுமையான நீதித்துறையில் உள்ள பிரச்சினைகளையும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேவேளை இலங்கையில் ஷரியா வங்கி தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுடன் இன்று சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக பொது பல சேனா அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.