ஞானசார தேரருக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் எஸ்.ரீ.பீ. அமைப்பு முறைப்பாடு

(FASTNEWS | COLOMBO) – பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் தூண்டப்படுவதாக குற்றம் சுமத்தி, சுவிடச்ர்லாந்தில் இயங்கி வரும் எஸ்.ரீ.பீ. என்னும் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஊடாக முஸ்லிம் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் குறித்த முறைப்பாட்டை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பை இரத்து செய்ய வேண்டுமெனவும் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் ஓர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம், இந்த தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் கிறிஸ்தவர்களை பாதுகாக்க வேண்டுமெனவும் குறித்த முறைப்பாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.