ஞானசார தேரருக்கு விடுதலை – ஜனாதிபதி இணக்கம்…?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளிகி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனிய நந்த தேரர் தெரிவித்துள்ளார்.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அண்மையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது ஜனாதிபதி இந்த இணக்கப்பாட்டை வெயிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.