நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 06 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர், கலகொட அத்தே ஞானசார தேரர் மீளவும் ஸ்ரீ ஜெயவர்தன வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் அண்மையில் சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு ஸ்ரீ ஜெயவர்தன வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.