டிகிரி யானை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவு

(FASTNEWS|COLOMBO)- 70 வயதான டிகிரி யானையை கண்டி தலதா பெரஹெரவுக்கு பயன்படுத்தியமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு வனசீவராசிகள் அமைச்சர் ஜோன் அமரதுங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்க உத்தரவிட்டுள்ளார்.

யானையின் உடல்நிலை குறித்து ஆராய்ந்து, அதன் பராமரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு துறையின் கால்நடை மருத்துவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.