பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் ஜூன் 29ம் திகதிவரை கைது செய்ய வேண்டாம் என நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ராதா நிறுவனத்தின் நிதி மோசடி தொடர்பில் டிரான் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை இன்று பரிசீலித்த உயர் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும்,டிரான் அலஸ் தாக்கல் செய்த மனு மூன்று நீதிபதிகள் குழு முன்னிலையில் இன்று (11) உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.