டில்சானின் இறுதி சர்வதேச கிரிக்கெட் போட்டியின் ஆட்டம் இன்று பல்லேகலயில் ..

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று(06) நடைபெறவுள்ளது.

குறித்த இந்த போட்டிக்கான இரண்டு அணிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எவையும் இருக்காது என்று கூறப்படுகிறது.

எனினும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என்று அணித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், இந்த தொடர் இலங்கை வீரர் திலகரத்ன டில்சானின் இறுதி சர்வதேச கிரிக்கெட் தொடராக அமையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.