கடந்த 2008 – 2009 ஆம் ஆண்டுகளில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செயற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டீ.கே.பி. தசநாயக்க உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் 06 பேரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று(07) கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்களை எதிர்வரும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மேலும், இவர்களை விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட சட்ட கோரிக்கை மனுவை எதிர்வரும் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-reeshmaa..