டெங்கு நோய் பரவும் அபாயம்

(FASTNEWS|COLOMBO) – மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் இந்த இடங்களில் டெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் தங்களது சுற்றுப் புறங்களில் நீர் தேங்கி நின்று நுளம்புகள் பெருகுவதற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.