கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் இது வரையான டெங்கு ஒழிப்பு வாரக் காலப்பகுதியில், டெங்கு நுளம்பு பெருகக்கூடிய 77,000 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய உபகரணங்களை கொழும்பு நகரின் எல்லைக்குள் பயன்படுத்துவதற்கு சுகாதாரப் பிரிவு தீர்மானித்துள்ளது.
இன்று(03) முதல் கொழும்பு மாநகர சபையின் ஒத்துழைப்புடன் குறித்த உபகரணங்கள் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் முதல்கட்டமாக கொழும்பு நகரிற்குள் 1,000 உபகரணங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.