(FASTNEWS|COLOMBO) இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இதுவரை 10 ஆயிரத்து 800 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இந்த எண்ணிக்கை கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்க கூடும் எனவும் இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.