(FASTNEWS|COLOMBO) தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
டெங்கு நோய் தொற்று காரணமாக இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 13 ஆயிரத்து 514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் சில நாட்களில் மழை பெய்யும் பட்சத்தில் டெங்கு நோய் தொற்று மீண்டும் அதிகரிக்க கூடிய அபாயம் நிலவுவதாக தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தின் விஷேட மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.