டென்னிஸ் வீராங்கனை நயோமி ஒசாகா விலகல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக டென்னிஸ் ஒழுங்கமைப்பு தொடரின் இறுதி போட்டியில் இருந்து மூன்றாம் நிலை டென்னிஸ் வீராங்கனை நயோமி ஒசாகா வெளியேறியுள்ளார்.

சென்செனில் நடைபெறவிருந்த இந்த போட்டியில், தோளில் ஏற்பட்டுள்ள உபாதைக் காரணமாக கலந்து கொள்ள முடியாது என்று அவர் அறிவித்துள்ளார்.

இன்று நடைபெறவிருந்த இந்த இறுதி போட்டியில் அவர் உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனை அஷ்லீ பார்ட்டியை எதிர்த்து விளையாடவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.