டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டத்தினால், விமானங்கள், புகையிரத போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் முதல் டெல்லியில் பனி மூட்டம் காரணமாக ரெயில் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
பனிமூட்டம் காரணமாக இன்று 27 புகையிரதங்கள் தாமதமாக புறப்படும் என தெரியவந்துள்ளது. இதனால் பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
புகையிரதங்கள் மற்றும் விமானங்கள் ரத்து குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.