அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வோர்னருக்கு முழங்கையில் சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடி வந்த நிலையில், நாளை(22) அவருக்கு, முழங்கையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவர் சில நாட்கள் ஓய்வு பெறவேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலிய அணி வீரர்களான, டெவிட் வோர்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மீத் ஆகியோர் கடந்த வருடம் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றின் போது, பந்தின் தன்மையை மாற்றிய குற்றச்சாட்டில் அவர்களுக்கு சர்வதேச போட்டிகளில் ஒரு வருடம் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர்கள் உள்ளுர் போட்டிகளில் விளையாடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.