டோனி சளையாது

(FASTNEWS | COLOMBO) – இந்தியா – நியூசிலாந்து இடையிலான அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ஓட்டங்களை எட்ட முடியாமல் இந்தியா 221 ஓட்டங்களில் சுருண்டு 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஜடேஜா ஒரு பக்கம் அதிரடியாக விளையாடிய போதும், டோனி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரன்அவுட்டாகி வெளியேறும்போது மிகுந்த மன உளைச்சலுடன் வெளியேறினார். இதனால் அவர் ஓய்வு முடிவை அறிவிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் போட்டி முடிந்த பின்னர் விராட் கோஹ்லி இதுகுறித்து கூறுகையில் ‘‘டோனி அவருடைய ஓய்வு குறித்து எங்களிடம் ஏதும் கூறவில்லை’’ என தெரிவித்திருந்தார்.