டோஹா கட்டார் வரையிலான விமான சேவைகளில் மாற்றம் இல்லை..

டோஹா கட்டார் வரையிலான விமான சேவைகள் முன்னர் நடைபெற்ற முறையில் எவ்வித தடைகளும் இன்றி முன்னெடுக்கப்படும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இனது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)