அமெரிக்காவில் அரசுத்துறைகள் வழமை போல் சீராக இயங்குவதற்கான சூழ்நிலையை ஜனாதிபதி டிரம்ப் மேற்கொள்ள வேண்டும் என ஹாலிவுட் பாடகி லேடி காகா வலியுறுத்தியுள்ளார்.
மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினை காரணமாக அமெரிக்காவில் பல்வேறு அரசுத்துறைகள் கடந்த 4 வாரங்களாக முடங்கி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக டிரம்புக்கு, ஹாலிவுட் திரையுலகின் பிரபல பாடகி லேடி காகா, அரசுத்துறைகள் முடக்கத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும் படி வலியுறுத்தி உள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில்,
“அரசுத்துறைகள் வழக்கம் போல் சீராக இயங்குவதற்கான சூழ்நிலையை ஜனாதிபதி டிரம்ப் கொண்டு வரவேண்டும். ஏனெனில் வாரந்தோறும் கிடைக்கும் ஊதியத்தை நம்பித்தான் அரச ஊழியர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பிழைத்து வருகிறார்கள்” என தெரிவித்தார்.