வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளம் பெண்ணொருவர் ஒரு பிள்ளைக்கு தந்தையான ஒருவருடன் கள்ளத் தொடர்பை பேணியுள்ளதுடன் இருவரும் தனியாக வாழ போவதாக கூறி ஊரை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த பெண்ணின் பெற்றோர் மற்றும் ஆண் நபரின் சட்டரீதியான மனைவி ஆகியோர் இது சம்பந்தமாக நேற்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, சட்டரீதியான மனைவியின் கணவர் மூலம் தனது வயிற்றில் கரு உருவாகியுள்ளதாகவும் சட்டரீதியான மனைவி இழப்பீடு வழங்கினால், பிரிந்து செல்ல விரும்புவதாகவும் பெண் கூறியுள்ளார்.
இறுதியில் ஒரு பிள்ளையின் தந்தை தனது சட்டரீதியான மனைவியுடன் செல்வதாக கூறி, பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்