ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவந்த 9 பேர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் துபாயில் இருந்து வருகை தந்துள்ளனர் எனவும் குறித்த சந்தேகநபர்கள் மருதானை, நீர்கொழும்பு, சீதுவ, சிலாபம் மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் சுமார் ஒரு கோடியே 63 இலட்சத்து 44 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க பிஸ்கட்களை தமது பயணப் பொதிகளில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.