நீதிமன்றம் தடையுத்தரவு விதித்திருந்தாலும் இன்று(25) தீர்மானித்தவாறு சைட்டம் எதிர்ப்பு பேரணி ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழத்திற்கு முன்னாள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அனைத்துப் பலகலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிறு வீரசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த எதிர்ப்புப் பேரணி கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கவுள்ளது.
எனினும் இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவிக்கையில்; நீதிமன்றத் தடையுத்தரவினை மீறி ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்படுமாயின் அதனை கலைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
#rishma