பொய்யான ஆவணங்களைத் தயார் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் தனக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு பிரதிநிதிகளின் உதவியைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் மஹிந்த கூட்டணி உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியல் மேடையில் முன்வைக்கப்படும் அறிவிப்புக்களுக்காக வழக்குத் தொடரப்பட்ட ஒரேயொரு நபர் தானாகத் தான் இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.