(FASTNEWS | COLOMBO) – தனிப்பட்ட மருத்துவத்துறை பட்டதாரிகளின் பதிவுகள் இம்மாதம் 16ம் திகதி நடைபெறும் என இலங்கை மருத்துவ சபை அறிவித்துள்ளது.
இதன்போது 1,300 பேர் வரை தமது பதிவுகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும், பதிவுகள் முடிவடைந்து இரண்டு கிழமைகளுக்குள் அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நீதிமன்ற கட்டளையின்படியே குறித்த பதிவுகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.