தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இன்று முதல் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, கிரிபத்கொட பொலிஸ் பிரிவில், வெளேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால், இன்று முதல் ஹுணுப்பிடி ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் மருதானை, தெமட்டகொடை மற்றும் பேஸ்லைன் வீதி உள்ளிட்ட ரயில் நிலையங்களிளும் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.