தனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களுத்துறை மாவட்டத்தின் 05 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி அகலவத்தை பிரதேச செயலகத்திற்குட்பட்ட  ஹொரன்கொட, பேரகம, தெபிலிகொட, கெக்குளுந்தர வடக்கு ஆகிய பகுதிகள் மற்றும்  பாலிந்த நுவர பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெல்லன ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.