தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 27 பேர் வீடுகளுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கந்தக்காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 27 பேர் தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்துகொண்டு வீடுதிரும்பியுள்ளனர.

இதேவேளை நாடு முழுவதும் 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் மொத்தமாக 4,882 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்துடன் இதுவரை மொத்தமாக 5,136 நபர்கள் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை பூர்த்திசெய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.