தனியார் காணிக்குள் அத்துமீறிய விகாராதிபதியால் பதற்ற நிலை..

மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், செங்கலடி – பதுளை வீதியிலுள்ள பன்குடாவெளியில் அரசமரம் உள்ள காணிக்குள்,  இன்று(16) அத்துமீறி நுழைந்ததையடுத்து, அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதாகவும் கடந்த காலங்களில் பௌத்த வழிபாட்டுத்தலம் இருந்ததாகவும் கூறி, தனியார் காணிக்குள் அத்துமீறி நுழைந்து அமர்ந்து கொண்டதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.