தனியார் துறையினருக்கான வேதன சட்ட மூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

தனியார் துறையினரின் சம்பளத்தினை 2,500 ரூபாவாக அதிகரிப்பது மற்றும் அடிப்படை சம்பளத்தை  10,௦௦௦ ரூபாவாக ஆக்குவது குறித்த இரண்டு சட்ட மூலங்கள் இன்று(11) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன.

குறித்த இரண்டு சட்ட மூலங்களும், தொழில் உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்தனவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளன.

மேலும், இதன் மூலம் தனியார் துறையினருக்கான  தொடர்பில் நாடாளுமன்றத்தில் சட்ட மூலங்கள் முன்வைக்கப்படும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைகின்றமையும் குறிப்பிடத்தக்கது.